இன்றைய மின்தடை

காரைக்குடி, அக். 19: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (அக். 19) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரிசாலை, செக்காலைசாலை, புதிய, பழைய பஸ்ஸ்டாண்டு, கல்லுகட்டி, செஞ்சை, கோவிலூர் ரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளா. சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிங்கம்புணரி நகர், அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, என்ஃபீல்டு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதே போல் காளாப்பூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட எஸ்.வி.மங்கலம் பிரான்மலை, வேங்கைபட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, உள்ளிட்ட சுற்றுக்கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் மொண்டி தெரிவித்துள்ளார்.

The post இன்றைய மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: