மார்த்தாண்டம் அருகே மது போதையில் பாறாங்கல் மீது தவறி விழுந்த கொத்தனார் பலி

மார்த்தாண்டம், அக். 19: மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியை சேர்ந்தவர் மோசஸ் (60). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். போதையில் டாஸ்மாக் அருகே உள்ள முட்டை விற்பனை கடையின் சுவற்றில் சாய்ந்து நீண்டநேரமாக நின்று உள்ளார். அப்போது சரிந்து கீழே விழுந்துள்ளார். இதில் பாறாங்கல் மீது தலை மோதி பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், மோசஸ் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே மது போதையில் பாறாங்கல் மீது தவறி விழுந்த கொத்தனார் பலி appeared first on Dinakaran.

Related Stories: