இக்கோயிலின் தலபுராணத்தின்படி வாணாசுரன் தளபதியான ஓணன் மற்றும் காந்தன் இருவரும் சுயம்புவாக தோன்றிய லிங்கத்திற்கு தன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்து பல வரங்களைப் பெற்று மோட்சம் அடைந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஜலந்திரன் லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வரங்களை பெற்றுள்ளான் என இத்தலப் புராணம் குறிப்பிடுகிறது.இந்த ஓணன் கந்தீஸ்வரர் பெயருக்கு – ஓணன் என்பதற்கு சனிக் கிரகமாகவும் கந்தீஸ்வரர் என்பதற்கு செவ்வாய் கிரகமாகவும் ஜலேந்திரன் என்பதற்கு சூரியன், சனி மற்றும் சந்திரன் இணைவாகவும் உள்ளது. காஞ்சிபுரம் என்ற ஊரானது ராசி மண்டலத்தில் ரிஷப ராசிக்கு உட்படுகிறது. ஆகவே, ரிஷப ராசியில் செவ்வாய் மற்றும் சனி தொடர்பு ஏற்பட்டால் இக்கோயிலில் வழிபடலாம்.மேலும், ரிஷபம், கடகம், விருச்சிகம்,கும்பம் ஆகிய ராசிகளில் செவ்வாய் மற்றும் சனி ஒன்றுக்கொன்று பார்வையோ சேர்க்கையோ இருந்தால் இக்கோயிலுக்குச் சென்று பனை ஓலையில் வெல்லம் வைத்து வழிபட்டு வந்தால் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.
வீடு கட்டும் பொழுது பாதியிலேயே நின்று தடை ஏற்பட்டால் இங்கு வந்து வழிபாடு செய்வதன் மூலம் தடை நீங்கி மீண்டும் வீடு முழுமை பெறும் பாக்கியம் உண்டாகிறது.ரத்தத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு ரத்தம் தொடர்பான நோய் இருந்தால் இந்த தலத்திற்கு சிவப்பு அரிசி புட்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து அங்கே தானம் செய்து வர, ரத்தத்தில் ஏற்பட்ட நோய் தீரும். கட்டடத் தொழில் செய்பவர்கள் பெரிய இயந்திரத் தளவாடத் தொழில் செய்பவர்கள் இக்கோயிலுக்கு சென்று பனைஓலை வெல்லம் வைத்து நெய்வேத்தியம் செய்து சிறிதளவு வீட்டிற்கு கொண்டுவர, தொழில் தடைகள் நீங்கும்.புனர்பூதோஷம் உள்ளவர்கள் மற்றும் ஐ.டி துறையில் இருப்பவர்களும் ஜலேந்திரன் ஈஸ்வரருக்கு பனை ஓலை வெல்லமும் பன்னீரும் தேனும் அபிஷேகத்திற்குக் கொடுத்து வர விரைவில் திருமணம் நடந்தேறும். இக்கோயிலுக்கு நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் பன்னீரும் அபிேஷகத்திற்கு கொடுத்துவர வேலையில் உள்ள பிரச்னைகள் தீரும் உயர்பதவி கிடைக்கும் வாய்ப்பை பெறுவர். இக்கோயிலில் உள்ள இரு சிவலிங்கங்களையும் மட்டும் தரிசித்து அங்குள்ள கன்னிப்பெண்ணிற்கு உணவு உடை வாங்கிக் கொடுத்து வந்தால் ரிஷப லக்னக்காரர்கள் தனஸ்தானம் பலம் பெறும் பணம் தொடர்ந்து தடையின்றி வரும்.
எப்படிச் செல்வது?
காஞ்சிபுரம் – அரக்கோணம் பேருந்து சாலையில் பஞ்சுப்பேட்ட பகுதியில் இக்கோயில் உள்ளது.
The post ஓண காந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் appeared first on Dinakaran.