இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. அதேபோல் அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்திய பகுதியை விட்டு நகர்ந்து செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.