கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்!

திருவள்ளூர்: கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தில், ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தண்டவாளத்தில் போல்டுகள் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்திலும், பொன்னேரி, கவரைப்பேட்டை பகுதியில் இரும்பு திருடர்கள், காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை. சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர்களிடமும் விசாரணை நடத்த முடிவு. இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி தலைமையிலான குழுவினர், ரயில்வே ஊழியர்கள் 60 பேரிடம் தனியாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

 

The post கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்! appeared first on Dinakaran.

Related Stories: