×
Saravana Stores

கஞ்சா விற்ற 4பேர் கைது

சேலம், அக்.18: சேலம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டி போலீசார், அரியானூர் சீரகாப்பாடி சர்வீஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள், அறந்தாங்கியை சேர்ந்த கோவிந்தராஜ்(24), திருநெல்வேலி தாராபுரம் தளவாய்புரத்தை சேர்ந்த சஞ்சய்(19), சேலம் குமாரசாமிப்பட்டி சென்னகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த புருசோத்தமன்(24), தளவாய்பட்டி சித்தனூரைச்சேர்ந்த பிரசாந்த்(20) என்பது தெரியவந்தது. இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற 4பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Attaiyambatti ,Arianur ,Seerakappadi ,Dinakaran ,
× RELATED ஓடை, கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம்