×
Saravana Stores

பட்டாசு வெடித்து எஸ்ஐக்கு கண் பார்வை பறிபோனது அதிமுகவினர் 20 பேர் மீது போலீஸ் வழக்கு ; 3 பேர் கைது

திருவெறும்பூர்: திருச்சி அடுத்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு கொரடாவுமான மனோகரன் ஆகியோர் வந்தனர்.

அப்போது அவர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்து பாதுகாப்பு பணியிலிருந்த திருவெறும்பூர் எஸ்எஸ்ஐ சுப்பிரமணியனின் வலது கண் பார்வை போறிபோனது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார், அதிமுக அமைப்பு செயலாளர் மனோகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜா (36), ராகவன் (36), முகமது ரபீக் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

The post பட்டாசு வெடித்து எஸ்ஐக்கு கண் பார்வை பறிபோனது அதிமுகவினர் 20 பேர் மீது போலீஸ் வழக்கு ; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruverampur ,Kootha Bar Road ,Union of Northern Union ,Virangans ,Thiruvarumpur ,Trichy ,Trichy Suburnagar South District ,Kumar ,Adimuka ,
× RELATED திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு...