கோத்தகிரி அருகே ஒரே நேரத்தில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா


கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வந்து வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்தது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.

மேலும், நகர பகுதி என்பதாலும், அதிக குடியிருப்புகளை கொண்டு அதிக மக்கள் வசிக்கக்கூடிய பகுதி என்பதாலும் ஒரே நேரத்தில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை உலா வந்த சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி அருகே ஒரே நேரத்தில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா appeared first on Dinakaran.

Related Stories: