கோத்தகிரியில் 4-வது நாளாக மழை கொட்டித் தீர்த்தது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4-வது நாளாக கொட்டித் தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதிய நேரங்களில் மூடுபனியுடன் மழை பெய்து வருகிறது. கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, கட்டபெட்டு பகுதிகளில் பனியுடன் மழையும் பெய்து வருகிறது. மழை பெய்து வருவதுடன் கடும் குளிர் வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

The post கோத்தகிரியில் 4-வது நாளாக மழை கொட்டித் தீர்த்தது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: