சென்னை: அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி வாழ்த்து கூறிய பவன் கல்யாணுக்கு ஒ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒரே பதிவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதிமுக ஆண்டு விழாவுக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என ஒ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.