அரசு பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட்: போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி

சென்னை: சென்னை தவிர மற்ற 7 போக்குவரத்துக் கழகங்களில் 3 மாதத்தில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு சென்னையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஏற்கனவே 100% மின்னணு முறையில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்துக்கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு விநியோகம் நடைமுறையில் உள்ளது. மற்ற போக்குவரத்துக்கழகங்களில் விரைவில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட் விநியோகம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அரசு பேருந்துகளில் மின்னணு இயந்திரம் மூலம் டிக்கெட்: போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி appeared first on Dinakaran.

Related Stories: