சென்னைக்கு 280 கி.மீ தூரத்தில் கிழக்கு தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கியுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு 280 கி.மீ. கிழக்கு தென்கிழக்கிலும் புதுச்சேரிக்கு 320 கி.மீ. கிழக்கு வடக்கிலும் மையம் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெல்லூருக்கு 370 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க கூடும்.

வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 15கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது அரபி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தம் தனியாக பிரிந்து மேற்கு நோக்கி மராட்டியம், கோவா நோக்கி சென்றுவிட்டது. அதன் காரணமாக சென்னைக்கு கனமழை ஆபத்து நீங்கி உள்ளது. இருப்பினும் அடுத்து வரக்கூடிய 2 நாட்களுக்கு சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னைக்கு 280 கி.மீ தூரத்தில் கிழக்கு தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: