கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது.
இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும். என கூறப்பட்டுள்ளது.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post கடந்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.