இ-பாஸ் முறையாக அமல்படுத்தப்படவில்லை: ஐகோர்ட்

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் முறையாக அமல்படுத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டுமே உள்ளது. இ-பாஸ் முறையாக அமல்படுத்தியது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post இ-பாஸ் முறையாக அமல்படுத்தப்படவில்லை: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: