அதுமட்டுமின்றி இந்த வழியாக கால்நடைகள் நடந்து செல்லும் போது இந்தப் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. எனவே, இந்த பள்ளத்தை மூடி, அந்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பணியையும் முடிக்காமல், பள்ளத்தையும் மூடாமல் கிடப்பில் வைத்திருப்பதால் எந்த நேரத்திலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள் மழைக்காலத்திற்கு முன், இந்த பள்ளத்தை மூடி அங்கு சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம் அருகே சீரமைக்கப்படாத சாலை பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.