புது மார்க்கெட் வீதியில் போக்குவரத்து மாற்றம்

 

திருப்பூர், அக்.14: திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர், அவிநாசி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய நகர பேருந்துகள் புது மார்க்கெட் வீதி வழியாக பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும். புது மார்க்கெட் வீதியில் ஏராளமான துணி,நகை மற்றும் பேன்சி கடைகள் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று வழக்கத்தைவிட அதிகமாக புது மார்க்கெட் வீதியில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் சார்பில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புது மார்க்கெட் வழியாக பேருந்துகள் வெளியே செல்ல அனுமதி மறுத்து டிவைடர்கள் வைத்தனர்.தொடர்ந்து பேருந்து நிலையத்தின் மற்றொரு நுழைவு வாயில் வழியாக வெளியேறி காமராஜ் சாலை வழியாக மாநகராட்சி சந்திப்பை கடந்து பேருந்துகள் சென்றது.பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post புது மார்க்கெட் வீதியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: