மின்வாரிய தொழில்நுட்ப பணியில் கேங்மேன்: அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை

சென்னை: மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பயிற்சி இல்லாத பணியாளர்களை தொழில்நுட்ப பயன்படுத்தக் கூடாது என மின்சார வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை சிறுசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் மின்வாரிய தொழில்நுட்ப பணிகளில் பயிற்சி பெறாதவர்களை பயன்படுத்துவதால் 4 ஆண்டுகளில் 70 பேர் இறப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மின்வாரிய தொழில்நுட்ப பணியில் கேங்மேன்: அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: