மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் திடீர் சாவு

 

ஈரோடு, அக்.10: பீகார் மாநிலம் நளந்தா ஜலால்பூரை சேர்ந்த உமேஷ் மஞ்சி மகன் தனன்ஜெய் (20). இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூரில் தங்கி, சிப்காட்டில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனன்ஜெய்க்கு கடந்த 4ம் தேதி காய்ச்சலால் ஈங்கூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகததால் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். மர்மகாய்ச்சலுக்கு வடமாநில வாலிபர் உயிரிழந்தது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: