×

போதை பொருள் பதுக்கி விற்ற தந்தை, மகன் கைது ஆரணி அருகே வீடு, கடையில்

ஆரணி, அக்.10: ஆரணி அருகே வீடு மற்றும் கடையில் போதை பொருள் பதுக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். ஆரணி அடுத்த தச்சூர், மேட்டூர், அரையாளம், வடுக்கசாத்து உள்ளிட்ட கிராமங்களில் ஹான்ஸ், குட்கா உட்பட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள ஒரு பங்க் கடையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், விசாரணையில், தச்சூர் செல்வ விநாயகர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி(51), அவரது மகன் ராஜசேகர்(33) ஆகிய இருவரும் தங்களது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, கடை மற்றும் அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்ததில், மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ₹31 ஆயிரம் மதிப்பிலான 52 கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து சுப்பிரமணி, அவரது மகன் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து, போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post போதை பொருள் பதுக்கி விற்ற தந்தை, மகன் கைது ஆரணி அருகே வீடு, கடையில் appeared first on Dinakaran.

Tags : Arani ,Thachur ,Mettur ,Arayalam ,Vadukkasathu ,
× RELATED நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவிடாமல்...