×

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்: மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்

சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களின் ஊதியத்தில் வருங்காலவைப்பு நிதிக்கு அளிக்கப்படும் தொகையில் ஓய்வூதியத்திற்கென ஒதுக்கப்படும் தொகையின் உச்சவரம்பு தற்போது ரூ.15 ஆயிரமாக உள்ளது. இதனை மேலும் உயர்த்த ஒன்றிய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.

அதே போல் ஆயிரம் ரூபாயாக உள்ள குறைந்த பட்ச பென்ஷன் தொகையை உயர்த்தவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தியாவசிய தேவையின் போது EPF பென்ஷன் தொகையிலிருந்து ஒருபகுதியை எடுப்பதற்கான அனுமதி உள்ளிட்ட விதிகளையும் எளிமையாக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாற்றங்களை ஆய்வு செய்த பிறகே அமல் படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

The post தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்: மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Chennai ,Dinakaran ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு