×

வீடியோ கேம் விளையாட தடை: பள்ளி மாணவன் தற்கொலை

பெரம்பூர்: செல்போனில் வீடியோ கேம் விளையாட தடைப்போட்டதால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். சென்னை வியாசர்பாடி திருவிக. தெருவை சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் ராஜா என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதன்பிறகு நதியா, மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகின்றார். அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த நவீன், வீட்டில் அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதுடன் சமூகவலைதள பக்கத்தைஅதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரை தாய் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை நதியா வேலைக்கு சென்றுவிட்டார். மகள் பிரியதர்ஷினி பள்ளிக்கு சென்று விட்டார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் நவீன் தனியாக இருந்துள்ளான். இதனிடையே நதியா, நவீனை செல்போனில் பலமுறை தொடர்புகொண்டபோதும் போனை எடுக்காததால் பதற்றம் அடைந்தார். இதனால் தனது வீட்டின் மாடியில் வசித்துவருகின்றவர்களிடம் பேசி மகனை போய் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதன்படி அவர்கள் சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

பலமுறை தட்டியும் திறக்காததால் உடைத்து சென்று பார்த்தபோது மின்விசிறியில் துப்பட்டாவால் நவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துகிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பியம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சென்று நவீன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வீடியோ கேம் விளையாட தடை: பள்ளி மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai ,Vyasarabadi Thiruvik ,Nadia ,Raja ,
× RELATED பெரம்பூர் வணிக வளாகத்தில் உள்ள...