ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான செப்டம்பர் ஊதியத்தை விடுவிப்பது தொடர்பாக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தனது பங்களிப்பான ரூ.2,151 கோடி அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்கள் 32,500 பேருக்கு ஊதியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: