×

நாய் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்

கடத்தூர், அக்.9: கடத்தூர் ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் சமீப காலமாக ெதரு நாய்கள் அதிகரித்துள்ளது. உணவு தேடி சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளை துரத்தி வருவதால் அதிகம் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடத்தூர் புதூர் சாலையில் டூவீலரில் வாலிபர் ஒருவர் சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதில் நாய் மீது மோதி சாலையில் விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாளுக்கு நாள் நாய்களால் விபத்துக்கள் ஏற்படுவதால் அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.

The post நாய் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kaduur ,Dinakaran ,
× RELATED மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு