டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற பஸ்

சாயல்குடி,அக்.9: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலையில் 8 மணிக்கு டவுன் பஸ் புறப்பட்டு கடலாடி, மலட்டாறு முக்குரோடு வழியாக சாயல்குடிக்கு சென்றது. பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பூப்பாண்டியபுரம் மலட்டாறு பாலம் அருகே பஸ்ஸின் முன்பக்கம், டிரைவர் இருக்கைக்கு கீழ் உள்ள டயர் திடீரென வெடித்தது. பலத்த சத்ததுடன் வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பஸ் மிதமான வேகத்தில் சென்றதால் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்ஸை இடது புறம் ஓரமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற பஸ் appeared first on Dinakaran.

Related Stories: