×

மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

 

சின்னமனூர், அக்.9: சின்னமனூர் – சீப்பாலக்கோட்டை சாலை, மின் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தபோது, கடை கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்ேபரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Bhaskaran ,Seeppalakottai Road, Min Nagar ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்