×

புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

போடி, அக்.9: போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ. குருகவுதம் மற்றும் போலீசார், டி.வி.கே.கே. நகர் மாங்காய் மார்க்கெட் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியிலுள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடை உரிமையாளர் சின்னமனூர் வடக்கு முஸ்லீம் தெருவை சேர்ந்த ஷேக் அப்துல்லா(50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Bodi Nagar Police Station S. I. Gurgaon and Police, ,D. ,V. K. ,K. ,Nagar Mangai Market ,Dinakaran ,
× RELATED போடி நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி