×

தேனியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

 

தேனி, அக்.9: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. வெயில் கொடுமை காரணமாக பகல் நேரங்களில் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. புரட்டாசி மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இம்மாதத்தில் ஒரு சில நாட்களில் மட்டுமே மழை பெய்தது. பகல் நேரங்களில் கோடை வெயிலை நினைவுபடுத்தும் வகையில், கடும் வெயில் காரணமாக சாலையோரங்களில் உள்ள குளிர்பான கடைகள், இளநீர் கடைகள், தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் குவிந்து வந்தனர்.

நேற்று காலை முதல் தேனி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையில் நேற்று மதியம் தேனி நகரை சுற்றி கருமேகம் சூழ்ந்து திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக நகரம் குளிர்ச்சி அடைந்தது. மழையின் காரணத்தினால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post தேனியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Theni ,Puratasi ,Dinakaran ,
× RELATED மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு