காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர்

சென்னை: முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்- 2024 ஆனது 23.09.2024 முதல் 27.09.2024 வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் சத்திஸ்கர் மாநில காவல்துறையால் நடத்தப்பெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுத்தூக்கும் குழு (பளுத்தூக்குதல், வளுத்தூக்குதல், யோகா) அணியை சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு 1-தங்கம், 3-வெள்ளி, 10-வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வீரர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.

மேலும் கூடுதல் காவல்துறை இயக்குநர், ஆயுதப்படை, சென்னை மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர், கடலோர காவல் குழுமம், சென்னை ஆகியோர் உடனிருந்து மேற்கண்ட வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

 

The post காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் காவல்துறை தலைமை இயக்குநர் appeared first on Dinakaran.

Related Stories: