காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் வாலிபர் கைது ஆசைவார்த்தை கூறி

செய்யாறு, அக். 8: செய்யாறு அருகே ஆசைவார்த்தை கூறி காதலியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரை செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்போது அவரது பக்கத்து கிராமமான வெங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (20) என்பவர் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். இளம்பெண் வாலிபரிடம் திருமணம் செய்து கொள்ள பலமுறை வற்புறுத்தி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினால் வீடு தேடி வந்து வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளம்பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப் இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் வாலிபர் கைது ஆசைவார்த்தை கூறி appeared first on Dinakaran.

Related Stories: