விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் உயிரிழப்பு உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இதுதொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொது மக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடிவிட்டனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 5 பேர் பலியாகும் அவலம் நடந்துள்ளது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன என தெரிய வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

The post விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் உயிரிழப்பு உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: