×

விசுவேசுவரய்யா அறக்கட்டளை சார்பில் பொறியாளர் தின சொற்பொழிவு

சென்னை: பொறியாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விசுவேசுவரய்யா நினைவு அறக்கட்டளையின் 35வது சொற்பொழிவு சென்னை தரமணியில், தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீராய்வு நிறுவனம், நீரியியல் மற்றும் தரக் கட்டுப்பாடு பிரிவின் மூலம், நேற்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் தலைமை வகித்தார். காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிசீர் பிரிவு பொறியாளர் சுப்பிரமணியன், அரசு சிறப்பு செயலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விசுவேசுவரய்யா அறக்கட்டளை சார்பில் பொறியாளர் தின சொற்பொழிவு appeared first on Dinakaran.

Tags : Engineer's Day ,Visvesvaraya Foundation ,CHENNAI ,Engineers Day ,Visvesvaraiya Memorial Trust ,Daramani, Chennai ,Hydrology ,Quality Control Division ,Irrigation Corporation ,Tamil Nadu Water Resources Department ,Dinakaran ,
× RELATED தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பொறியாளர் தின விழா