விளாத்திகுளம் கனரா வங்கி புதிய கட்டிடம்

விளாத்திகுளம்,அக்.5: விளாத்திகுளம் கனரா வங்கி கிளை புதிய கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார். கனரா வங்கியின் விளாத்திகுளம் கிளை மதுரை சாலை அம்பாள் நகர் நுழைவாயில் அருகே செயல்பட்டு வந்தது. தற்போது இந்த வங்கி இடமாற்றம் செய்யப்பட்டு விளாத்திகுளம்-எட்டயபுரம் சாலையில் வள்ளி திரையரங்கம் பஸ் நிறுத்தம் அருகே புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. வங்கியின் புதிய கட்டிடத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மதுரை வட்ட அலுவலக பொதுமேலாளர் கிருஷ்ணமோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்வில் தூத்துக்குடி மண்டல தலைவரும் உதவி பொது மேலாளருமான ஜக்கலா சுரேந்திரபாபு, விளாத்திகுளம் கிளை மேலாளர் மாரிச்செல்வி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் கிழக்கு சின்னமாரிமுத்து, மேற்கு அன்புராஜன்,புதூர் மத்திய ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தொழிலதிபர் சுப்பாரெட்டியார், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post விளாத்திகுளம் கனரா வங்கி புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: