சுற்றுலா வாகன நிறுத்தமான தீர்த்தமலை பஸ் ஸ்டாண்ட்


அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் கோயில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அத்துடன் திருவண்ணாமலை பஸ்களும், இந்த வழியாக சென்று வருகிறது. சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, கடந்த 2013ம் ஆண்டு ₹17 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், ‘பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலையிலேயே நின்று செல்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்க நேரிடுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்,’ என்றனர்.

The post சுற்றுலா வாகன நிறுத்தமான தீர்த்தமலை பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Related Stories: