டெல்லி மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை: 2 சிறுவர்கள் திடீர் தாக்குதல்

புதுடெல்லி: டெல்லி, ஜெயந்பூர் பகுதியில் நீமா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 1.45க்கு இந்த மருத்துவமனைக்கு 17 வயதுடைய 2 சிறுவர்கள் வந்தனர். அவர்களில் ஒருவனுக்கு கால் விரல்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. இரவுப் பணியில் இருந்த மருத்துவர் ஜாவேத், அவனுக்கு சிகிச்சை அளித்து விட்டு தனது அறையில் அமர்ந்திருந்தார். காயமடைந்த சிறுவனுக்கு அங்கிருந்த செவிலியர் ஒருவர் கட்டு போட்டு விட்டார். இதைத் தொடர்ந்து, மருத்துவர் ஜாவேத்திடம் நன்றி சொல்லி விட்டு செல்வதாக கூறியபடி அவருடைய அறைக்குள் 2 சிறுவர்களும் நுழைந்தனர். அடுத்த நொடி, அறைக்குள் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. மருத்துவமனையில் இருந்த செவிலியும், ஆண் ஊழியரும் ஓடி சென்று பார்த்தனர். அப்போது, 2 சிறுவர்களும் அவர்களை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அறைக்குள் இருந்த நாற்காலியில் மருத்துவர் ஜாவேத் ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post டெல்லி மருத்துவமனையில் டாக்டர் சுட்டுக்கொலை: 2 சிறுவர்கள் திடீர் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: