ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும்.

சென்னையில் மாநகர பேருந்துகள் அடுத்தபடியாக புறநகர் மின்சார ரயில்கள் மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக உள்ளது. இதில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். தினமும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குறித்த கட்டணத்தில் பயணிக்க மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இந்நிலையில் நாளை (02.10.2024) அன்று காந்தி செயந்தியை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும்.

The post ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: