×

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 பேருக்கு இந்த நோய் பரவியது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கு அமீபா மூளைக் காய்ச்சல் பரவியது. இதற்கிடையே மேலும் 2 பேருக்கு அமீபா மூளைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2 பேரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

The post திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Navaikkulam ,
× RELATED ₹17,500 இல்லாததால் இடம் மறுப்பு; தலித்...