சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் நக்சலைட்கள் வைத்திருந்த கண்ணி வெடி வெடித்ததில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயமடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் டாரெம் காவல் நிலைய பகுதியில் சின்னெளூர் முகாமில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்ணி வெடிகளை அகற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கண்ணி வெடிகளுடன் இணைக்கப்பட்ட ஒரு கம்பியை கண்டனர். இதையடுத்து வெடிகுண்டை தேட முயன்றபோது பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். 5 பேரும் பிஜப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம் appeared first on Dinakaran.

Related Stories: