உக்ரைனின் 125 டிரோன்கள் அழிப்பு: ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

கீவ்: உக்ரைன் ஏவிய 125 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், உக்ரைன் நேற்று ஒரே நாளில் 125 டிரோன்களை ஏவியது. இந்த ஏவுகணைகள் அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டது. இதில் வோல்கோகிராட் மாகாணத்தில் ஏராளமான டிரோன்களை உக்ரைன் ஏவியது.

அங்கு மட்டும் 67 டிரோன்களை விமான படையினர் சுட்டு வீழ்த்தினர். வோரோனேஸ்,ரோஸ்டோவ் உள்ளிட்ட 7 மாகாணங்களில் டிரோன்கள் தாக்குதல்கள் நடந்தன என்று தெரிவித்தது.வோரோனேஸ் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் விழுந்ததில் கட்டிடத்தில் தீப்பிடித்தது என்றும் இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று ஆளுர் வசிலி கோலுபேவ் தெரிவித்தார்.

The post உக்ரைனின் 125 டிரோன்கள் அழிப்பு: ரஷ்ய ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: