துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன்: உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது; என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நன்றி. அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அதன்படி எனது பணிகளை அமைத்துக் கொள்கிறேன்.

துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன்.  துணை முதல்வர் பதவி அளித்ததற்காக முதலமைச்சர், திமுக பொதுச்செயலாளருக்கு நன்றி . என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். மக்களுக்காக உழைக்க இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post துணை முதலமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன்: உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: