செயற்கை ஆக்சிஜன் தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள் அந்த பெண் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் எந்த சிகிச்சையும் தராமல் இருந்ததாக நோயாளியின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டி, பெண்கள் வார்டில் இருந்த ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து சாகர்தத்தா அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக நள்ளிரவில் அறிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் மருத்துவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
The post டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.