தேசத்தை அச்சுறுத்துகின்ற பாசிச சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் திகழ்கிறார்: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஒன்றிய அரசாக இருந்தாலும் மற்ற மாநில முதல்வராக இருந்தாலும் தமிழகத்திற்கு வரும்போது பொற்கால ஆட்சி நடந்து வருவதாக பாராட்டி செல்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயலாற்றி வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். ஒன்றிய பாசிச ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் திகழ்ந்து வருகிறார். கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு கடந்து தற்போது பவள விழா காணும் இப்பொழுது முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுக நூற்றாண்டு காணும் பொழுதும் அவர் முதல்வராக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழகத்தை மேன்மையுள்ள மாநிலமாக மாற்றுவதற்காக ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது தான் இந்த நூற்றாண்டின் சிறப்பாகும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.

The post தேசத்தை அச்சுறுத்துகின்ற பாசிச சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக முதல்வர் திகழ்கிறார்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: