முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார். பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நேற்று விடுதலையானார். 471 நாட்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வரவேற்றோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: