ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நடைபெற இருப்பதால், வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் போட்டிகளை நடத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் 2025ல் 84 போட்டிகளை நடத்த நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. ஏனெனில் போட்டிகளின் அதிகரிப்பு காரணமாக வீரர்களின் சுமையை நாங்கள் காரணியாகக் கொள்ள வேண்டும். இது (84 போட்டி) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்வதா என்பதை பிசிசிஐ இறுதி முடிவு செய்யும்’’ என்றார்.
The post ஐபிஎல்லில் போட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பா? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேட்டி appeared first on Dinakaran.