×

தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏ.டி.எம் கொள்ளையர்களை விரட்டி சென்ற போலீஸ் துப்பாக்கி முனையில் 5 பேர் கைது செய்துள்ளனர்.

கேரள ஏ.டி.எம்.கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் சிக்கினர்

கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது. கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையத்தில் பிடிபட்டனர்.திருச்சூரில் 3 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து பணம் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாடு தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளில் ஏராளமான வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி வந்துள்ளது.

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏடிஎம் கொள்ளையன் பலி

தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை போலீசார் 30 வாகனங்களில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். துப்பாக்கியுடன் கன்டெய்னர் லாரியில் வந்த கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். குமாரபாளையம் அருகே போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

கன்டெய்னருக்குள் இருந்த கார், ஏ.டி.எம். இயந்திரம் பறிமுதல்

ராஜஸ்தான் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரிக்குள் கார், ஏ.டி.எம். இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றொரு ஏடிஎம் எந்திரத்தையும் தூக்கி வந்தனர்.

5 ராஜஸ்தான் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கைது

ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் பிடிபட்டது பவாரியா கும்பல்?

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது பவாரியா கும்பல் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்த கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழ்நாடு போலீஸ் பிடித்துள்ளது. கன்டெய்னர் லாரியில் சென்று நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளையடிப்பது பவாரியா கும்பலின் வழக்கம். ஏ.டி.எம் கொள்ளையில் மட்டுமின்றி கேரளாவில் நடந்த 2 கிலோ தங்கம் வழிப்பறியிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பா என விசாரணை நடைபெற்று வருகிறது.

கும்பலை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்

குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏடிஎம் கொள்ளையர்களை விரட்டிச் சென்று தமிழ்நாடு போலீஸ் பிடித்தது. ஏடிஎம் கொள்ளையர்களை போலீசார் 30 இருசக்கர வாகனங்களில் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர். கன்டெய்னருக்குள் இருந்த சொகுசு கார் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். கேரளாவில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.65 லட்சம் மட்டுமின்றி மேலும் ஏராளமான பணம் கன்டெய்னருக்குள் இருந்தது தெரியவந்தது.

கேரள போலீஸ் தமிழ்நாடு விரைகிறது

திருச்சூரில் இருந்து கேரள தனிப்படை போலீஸார் தமிழ்நாடு விரைகின்றனர்.குமாரபாளையம் அருகே சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீசார் காயம்

ஏடிஎம் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீசார் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

The post தென்னிந்தியாவில் பவாரியா கும்பல் கைவரிசையா? குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் சேசிங்..வடமாநில கொள்ளை கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : South India ,Kumarapalayam ,North State ,Namakkal ,Kerala ,Tamil Nadu ,Bavarian Gang ,State ,
× RELATED குமாரபாளையத்தில் துப்பாக்கியுடன்...