வங்க வீரர் ஷாகிப் ஓய்வு

வங்கதேசத்தின் ஆல்ரவுண்டரும், அரசியல்வாதியுமான ஷாகிப் அல் ஹசன்(37), டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். ‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெறும் டெஸ்ட் தனது கடைசி டெஸ்ட் ஆட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என ஷாகிப் கூறியுள்ளார். வங்கம்-தெஆ தொடர் இன்னும் முடிவாகவில்லை. கூடவே அணியில் இடம் பெற முடியாவிட்டால் இன்று தொடங்கும் டெஸ்ட்தான் ஷாகிப்பின் கடைசி டெஸ்ட்டாக இருக்கும்.

ஆகஸ்ட்டில் ஆட்சியை இழந்த அவாமி லீக் கட்சியின் எம்பியாக ஷாகிப் இந்த ஆண்டு ஜனவரியில் தேர்வானார். அந்த கட்சியின், ஆட்சியின் முக்கிய பிரமுகர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதுகுறித்து ஷாகிப், ‘ நான் வங்கதேசத்தின் குடிமகன். அதனால் வங்கதேசத்துக்கு திரும்பிச் செல்வதில் எந்த பிரச்னையும் வரக் கூடாது. எனது பாதுகாப்பு குறித்து குடும்பத்தினரும், நண்பரகளும் கவலை கொண்டுள்ளனர். நிலைமை மாறுகிறது என்று நம்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

The post வங்க வீரர் ஷாகிப் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: