மேலும், மழைக் காலங்களில் அதிக மழை பெய்தால் கால்வாயில் தேங்கி இருக்கும் குப்பைகள், கழிவு நீர் மாதவரம் ரெட்டேரியில் கலக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், ரெட்டேரியில் உள்ள தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். கால்வாயில் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாயில் குப்பை மற்றும் கழிவு நீரை விடுபவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post புழல் அருகே மாசடைந்து காணப்படும் உபரிநீர் கால்வாய்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.