இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், இந்த சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தொன்மை வாய்ந்தது என்பதும், தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிய வந்தது. இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரும் இந்த சிலையை எங்கிருந்து கடத்தினர், யாரிடம் விற்க முயன்றனர், இதில் தொடர்புள்ள நபர்கள் யார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.