×

வத்சலா திட்டத்தில் ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு: மாணிக்கம் தாகூர் குற்றசாட்டு

விருதுநகர்: வத்சலா திட்டத்தின் கீழ் விருதுநகரில் ஒருவருக்கு கூட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றசாட்டு வைத்துள்ளார். பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்காக வத்சலா திட்டத்தில் மாதம் ரூ.4,000 தருவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. விருதுநகரில் 2 ஆண்டுகளாக ஒரு குழந்தைக்கு கூட வத்சலா திட்டத்தில் நிதி வழங்கப்படவில்லை . ஒன்றிய பாஜக அரசு எப்போதும் வாயில் வடை சுடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது என விமர்சித்தார்.

The post வத்சலா திட்டத்தில் ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு: மாணிக்கம் தாகூர் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Manikam ,Virudhunagar ,Congress ,Manikam Tagore ,Union government ,Manickam Tagore ,Dinakaran ,
× RELATED ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசிய ஆளுநர்...