அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை,செப்.25: புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 திரும்ப பெற வேண்டும் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வேண்டும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்.

டெல்லி மகாராஷ்டிரா அரசுகளை போல் தமிழ்நாட்டிலும் இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணம் உயர்த்தி கொடுக்க வேண்டும் டோல்கேட் கட்டணங்களை வாபஸ் வாங்க வேண்டும் விபத்தை காரணம் காட்டி ஓட்டுநரை கொலை குற்றவாளி ஆக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது அவர்கள் ஒன்றிய மாநில அரசுகளை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

The post அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: