தா.பழூரில் திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் நேர்முக ஆய்வு கூட்டம்

 

தா.பழூர், செப். 25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நிர்வாகிகள் நேர்முக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தா.பழூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரி ஆணையின்படி, மாவட்டக் திமுகச் செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக அணிகளின் நிர்வாகிகள் தேர்வு குறித்த நேர்முக ஆய்வுக் கூட்டம், ஒன்றிய திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட திமுகத் துணைச் செயலாளர்கள் மு.கணேசன், லதாபாலு, சி.சந்திரசேகரன் மற்றும் பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக சட்ட திட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் , அணி நிர்வாகிகளுக்கான ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் திமுக நிர்வாகிகள், திமுக தோழர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

The post தா.பழூரில் திமுக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் நேர்முக ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: